Back
Poem
January 13, 2018
கவிதை
SHARE

❣️கார் குழல் மோதிடும்
காதிலே நானுமே
கம்மலாய் ஆடவோ?
❣️மார் வரை ஆடிடும்
தாலியில் நானுமே
நூலென ஆகவோ?
❣️நேர் வர வாரிய
சிகையினில் நானுமே
பூவென ஏறவோ?
❣️தார் வழிச் சாலையை
தடவிடும் பாதத்தில்
செருப்பென மாறவோ?
❣️மார்கழி பனியினில்
நனைந்திடும் உடலை
ஆடையாய் மூடவோ?
❣️கூர்விழி நாணிட
குளிர் பனி நீங்கிட
ஆசையாய் கூடவோ?
🎶தாநந்ந தனநந்ந
தாநந்ந தனநந்ந
தாநந்நே தனநந்நநே 🎶
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...