Back

Poem

January 10, 2018

கவிதை

SHARE

கவிதை

#பெற்றோர்களுக்கு
👉 ஆடு மாடுகளும் பறவைகளும் இதர மிருகங்களும் கூட தான் பெற்ற குட்டிகளையும் குஞ்சுகளையும் ஒரு குறிப்பிட நாள் வரை அன்போடு வளர்க்கிறன.அவை மனிதனை போல தன் பிள்ளைகளின் பேரில் எதையும் சுமையாய்
சுமத்துவதில்லை.
" தன் இனத்தின் அடையாளம் பேணு.
கலாச்சாரம் கடைபிடி
உன்னை பெத்து வளர்த்ததுக்காக ஒரு முறை எங்களை நினைச்சு பாரு
கடைசி காலத்துல சோறு தண்ணி ஊத்துவியா
பெத்ததுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்"

இப்படி எந்த மிருகமும் பறவையும் தன் பிள்ளைகளை தன் கட்டுக்குள் வைப்பதில்லை.
வள்ளுவன் சொல்லும் போது கூட
மகன் தந்தைக் காற்றும் "உதவி" என்று தான் சொல்லி இருக்கிறான். கடமை என்று சொல்லவில்லை.
எப்போதோ வாழ்ந்து விட்டு போன வள்ளுவனுக்கு இருந்த புரிதல் கூட இன்றைய கால பெற்றோர்களுக்கு இல்லை.

இன்னும் நிறைய கொடுமைகள் உண்டு தனக்கு சாதகமானதை பிள்ளைகள் செய்யாத பட்சத்தில் தற்கொலை மிரட்டல் விடுவது. இவர்கள் எல்லாம் இன்னும் மனிதக் குரங்காகவே வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்று தான் சொல்ல
வேண்டும்.
குழந்தைகளை சுதந்திரமாய் விடுங்கள். அதன் சுதந்திரத்தை பறிக்கும் பாதுகாப்பு அவசியமில்லாதது. காக்கை குருவிகளிடமும் ஆடு மாடுகளிடமும் இருந்து கற்றுக் கொள்ளுங்கள். பிள்ளைகளை வளர்ப்பது எப்படி என்று.

வள்ளுவன் இன்னொன்றும் சொல்லி இருக்கிறான்
தந்தை மகற்காற்றும் "நன்றி" என்று தான் சொல்லி இருக்கிறான் கடன் என்று அல்ல.
உங்களை தாய் தகப்பனாக்கியதற்காக நன்றி சொலுத்தும் காரியமாய் பெற்ற பிள்ளைகளை நல்ல நிலைக்கு கொண்டு வருவது உங்கள் கடமை. அதை நினைவில் வையுங்கள்.
இனி பிள்ளைகளை பிடிக்குள் வைக்காதீர்கள். வாழவிடுங்கள். சுதந்திரமாய்.
ஏனென்றால்
#வாழ்தல்_அதனதன்_சுதந்திரம்.

நன்றி.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...