Back

Poem

January 4, 2018

கவிதை

SHARE

கவிதை

கரு கரு வென
பெருந் தொடைக்கு கீழ் வரை
நீண்டிருக்கும் முடியை அள்ளி முடிந்து
கொண்டையிட்டு
கனகாமரை சூடி
காட்டனோ கண்டாங்கியோ
பின் கொசுவத்தோடு
கணுக்கால் வரை கட்டி
கல் வைத்த மூக்குத்தி போட்டு
அல்லக் காது குத்தாது போனாலும்
அழகா யொரு தொங்கட்டான் போட்டு
மச மச வென இருக்கும் பொழுதில்
சாணம் அள்ளி வந்து
வாசல் தெளித்து கோலம் மிட்டு
பிள்ளையார் பிடித்து வைத்து
அதனருகில் பூசணி
பூ வைத்து-பின்
மாமன் தூங்கு வதறிந்து
சமையற் கட்டில் சாமான்களை உருட்டாமல்
சுக்கு போட்டு
சுருக்கென்று உரைக்கும் சூட்டோடு
காபியோ டீயோ கொண்டு வந்து
"எந்திரி மாமா" என எழுப்பி விடும்
நேச முள்ள பெண்ணொருத்தியை
நெஞ்சு தேடுகிறது.

❤️

(இப்படி ஒரு பொண்ணு கிடைச்சா
தலைய அடமானம் வச்சாவது
வரதட்சணை வாங்கமா சொந்த செலவுல தாலி கட்டிடலாம்.

ஆனா இப்படி யாரும் இல்லையே.)

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...