Back
Poem
November 29, 2017
கவிதை
SHARE

நீயும் நானும்
இளம் வயதில்
மண்டியில் தான் தவழ்ந்தோம்.
இப்போது கூட
இருவரும்
காலால் தான்
நடக்கிறோம்.
தினமும்
வாயால் உண்டு
போக வேண்டிய வழியில் தான்
போய் கொண்டிருக்கிறோம்.
இதயம் கூட
உனக்கும் எனக்கும்
இடப் பக்கமாய் தான் இருக்கிறது.
இப்படி எனக்கு தெரிந்து
உனக்கும் எனக்கும் சொல்லும் படியாய்
ஒரு வேறுபாடும் இல்லை.
பிறகு எதைக் கொண்டு
பிரித்தாய்
நீ மேல் சாதி
நான் கீழ் சாதி என்று?
ஒரு வேலை
என் கீழுறுப்புகள் செய்வதை எல்லாம்
நீ மேலுறுப்புகளால் செய்கிறாயோ?
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...