Back

Poem

November 6, 2017

கவிதை

SHARE

கவிதை

நிம்மதிற்ற வாழ்க்கைகுள் என்னை நானே நிர்பந்தித்து தள்ளுகிறேன். எதுவும் தெரியாதிருத்தலும் யாதும் தெரிந்திருத்தலும் வாழ்க்கையின் வரம். அரையும் குறையுமாய் தெரிந்து ஆழ்
மனதின் சந்தேகங்களை மனதின் ஆழத்திலேயே மறைத்து கொண்டு வாழ்வதென்பது பெரும் சாபம். சராசரிகளை போலன்றி வாழ நினைக்கிறேன். சங்கடங்களும் மனச் சலனமும் கூடிக் கொண்டே போகிறது. சூழ்
கொண்ட தளிரென மேல் நோக்கி வளர்கிறேனா? இல்லை என்னுள்ளேயே தாழ்ந்து போகிறேனா? தெரியவில்லை. மனத் தெளிவில்லை. உடமைகள் பறிபோகும் போகும் நிலையிலும் பயந்த படியே பயமற்றவனாய்
நடிக்கிறேன். சகலத்தையும் சந்தேகித்த படி அகல மனம் திறந்து முகம் மலர அன்பு செய்கிறேன். போலியாய். சந்தேகித்தல் சரியா? சிநேக அணை தான்டி சந்தேக சமுத்திரம் வருமா? கூடாது.
வந்தால் வாழ்வு கெடும். அன்பே சுடும். #சந்தேகித்தல். #அத்தியாயம் 1

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...