Back

Poem

October 28, 2017

கவிதை

SHARE

கவிதை

இளமை இருந்ததனால் இதயம் துடித்ததனால் நாமிருவர் நடத்திய நாடகம் இன்றோடு முடிகிறது. நினைவு கொதிப்பதனால் நிஜமும் புரிவதனால் நிறமற்ற ரத்தம் நம்கண்ணில் வழிகிறது. கனவு கலைகிறது
. துரோகம் ஈட்டியென துளைத் தெடுக்கிறது. உயிர் துடித்து அழுகிறது. ஓலக் குரலோங்கி எழுகிறது. தங்கமே தாங்கி கொள். என் மன்னிப்புக் கடிதம் மறுப்பின்றி வாங்கிக் கொள். பிரியம்
மறந்து பிரிவோம். மரித்து பிறந்த பின்னேனும் மணம் புரிவோம். அவளை மறுத்து உன்னை மணந்தால் உன்னையும் என்னையும் ஊர் ஏசும். உன்னை பிரிந்து அவளை சேர்ந்தால் உள்ளம் கூசும்.
தங்கமே தாங்கி கொள். போகிறேன். இப்படிக்கு கோவலன்.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...