Back

Poem

October 14, 2017

கவிதை

SHARE

கவிதை

எழிலுறு நுதலும் ஒளியுறு விழியும் பழிப்புறு இதழும் பார்வையில் திமிரும் பாங்காய் அமைந்த பாவை அவளும் தாங்கா அழகொடு தனங்களை தாங்கி தனித்தே நின்ற எனையும் நோக்கி தனித்தே
வந்தாள் தயக்கம் நீக்கி வெட்கிக் குனிந்து வெளிர் கன்னம் வெட்சி பூவென வேகமாய் சிவக்க பட்டென இதழ்கள் பூத்து சொன்னாள் "மலராய் இருந்தும் மணமொடு இருந்தும் மாலைக்கு ஆகா
தாழை போல வாலிப மிருந்தும் வயது மிருந்தும் வாரி சீன இயலாள் நானும் உந்தன் வார்த்தைக்கு வாக்க படவே சிந்தை கொண்டேன் சிரிப்பும் கொண்டேன் மறுப்பு இன்றி மனமும் ஒன்றி
சிறுகவியில் என்னை சிந்தி வைப்பாய் பாவப்பட்ட ஜீவன் என்னா சையை கோவம் இன்றி கண்ணே நீயும் கொஞ்சம் நிறைவேற்றி வைப்பாய் " என்று. கெஞ்சும் மொழியி லவளெனை கேட்டும் யோசித்து
நின்றேன்! கையேந்தாது காதல் யாசித்து நின்றாளை யாரோ போல நாசியில் விரல்வைத்து வியந்து கொண்டேன் மாசில்லாள் இவளுக்கென்ன மறுமொழி சொல்வதென மனக்குளம் குழம்பி போனேன்! மறுபடியும்
கணமொன்று யோசித்தேன் தெளிந்தேன்! சொன்னேன்!

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...