Back

Poem

July 2, 2017

கவிதை

SHARE

கவிதை

மன்னித்து விடடி என் மாதவி... இது உனக்கானது தான். உன் மீது பிரியம் கொண்டு நெருங்கி வந்து உறவு கொண்டு பிரியம் தீராமல் பிரிந்த என்னை உனக்கு புரிய வைக்கும் முயற்சி.
மன்னித்து விடடி என் மாதவி... நீ தண்டிக்கவும் தகுதியில்லாதவன் நான். மன்னித்து விடு.. கண்ணகியை பிரிந்தேன் அவள் நினைவில் கண்ணீரை சுரந்தேன் அழுதேன் துடித்தேன்... ஆறுதலானாய்
ஆசுவசாப்படுத்தினாய் உன் வலி மறைத்து எனக்கு வலி களைந்தாய்.... போனவள் நினைவில் பொழுதுக்கும் அழுமென்னை ஆலிங்கனித்தாய்.... அவளாகவே அவதரித்தாய்.. ஆனால் நான் மனிதனினும்
மட்டமான பிறவி... என் மீது நேசமழை பொழிந்து நெஞ்சு குளிர்ந்த உன் மீது நெருப்பு மழை பொழிந்து போகிறேன் மன்னித்து விடு.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...