Back
Poem
May 5, 2017
கவிதை
SHARE

புலன் வழி புணர்தல் ஒன்றே சுகமென்ற புரிதல் கொண்ட காமுகர்களே. கனிச்சதைக்குள் விதையென கன்னி சதைக்குள் மனம் உள்ளதை மறந்து விடாதீர்கள். சந்தைக்கு வந்த மாட்டை சகலரும் பல்
பிடித்து பார்ப்பது போல் சரச விரசம் கொண்டோரெல்லாம் புணர்ந்து புலன் இனிக்க பெண் என்பவள் பொம்மையுமில்லை போதைப்பொருளுமில்லை. அவள் அமைதியாய் எரிகின்ற அக்னி. இந்த உலகிற்கு
ஒளியேற்றும் உயிருள்ள சூரியன். இருள் நீக்கும் அருள்விளக்கு. அவளை உங்கள் ஆண்மைக்கு குளிருக்கு இரையாக்கி விடாதீர்கள். ர. அஜீத்குமார்.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...