Back
Poem
April 4, 2017
கவிதை
SHARE

நேசத்துரோகி...! துயரக் கிணற்றில் என்னை தூக்கி எறிந்து போன நேசத்துரோகி..!!! தேசம் காத்தானம் தேசம். பாசமில்லாதவன்.! கண்ணிவெடி காலுக்கடியில் இருக்க கல்யாணம் ஆன பின்னும்
கன்னியாய் இருக்கும் என்னை நினைத்திருந்திருந்தால் அழுகிற என்னை முன்னால் அசைவில்லாமல் படுத்திருப்பானா??? அவனுக்கென்ன ராணுவ மரியாதை.??? விடுங்கள் கண்ணீரின் சூட்டிலே
அஸ்தியாக்கி விடுகிறேன் அவனை..!!! அடே... பூவும் பொட்டுமில்லாமல் வெள்ளைச் சேலையில் என்னை விதவை கோலத்தில் பார்க்கவா நாடு காக்க வீடு விட்டு போன நீ கூடு விட்டு போனாய்??
அதான் உன் ஆசையா? காலம் முழுக்க விதவை கோலத்திலேயே இருக்கிறேனடா. விட்டுப் போனவனே வீடு வாடா...!!!!
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...