Back
Poem
April 22, 2016
கவிதை
SHARE

நீண்ட நாட்களுக்கு பின்
நீ பேச
நான் கேட்க
சுகமாய் இருக்கிறது
காலங்கள் மாறினாலும்
கடுகளவும் மாறாத
அதே
குழந்தை தனமான
குழைந்த பேச்சு
அடியே
அன்புடையுவளே
உன் பேச்சில்
எனக்குள்ள
அந்த பழைய கிறக்கம்
அப்படியே தானிருக்கிறது.
"என்னோடு பேச
உனக்கு எதுவும் இல்லையா"
என்று
நீ கேட்கையில்
நிறைய பேசத் தோன்றுகிறது
ஆனால்
நானென்ன செய்ய
வார்த்தைகள்
வாய்விட்டு
வருவதில்லையே!!!!
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...