Back
Article
September 29, 2022
கட்டுரை
SHARE

தெரிந்தவர்களுக்குள்ள
தெரியாத முகம் தேடி
தெரிந்து கொண்டேன்!
எல்லோரும் தேனொடு கொடுக்குள்ள தேனீ.
நண்ப..
ஒரு துரோகத்தின் வாள் துளைத்த வலியில் துடிப்பவன்
மருந்திடும் கைகளைக் கூட
சந்தேகித்து மறுக்கத் தான் செய்வான்.
ஏமாந்த பிள்ளை நான்
யாரைத் தான் நம்புவேனோ?
யாரையும் நம்பாமை நன்றென்று சொல்லுது
உள்ளுள்ள வடுவின் வாய்.
வழக்கமான மணியோசைக்கு பின்னே
கறித் துண்டு வருமென்று
அனிச்சையாக ஜொல் லொழுக்கும் நாயாய்
அன்பின் சொல்லுக்கு
வாலாட்டி பழகிய நான்
எப்போதும் என்னோடு
உறவாக - உடனிருப்பார்கள் என்றிருந்தேன்.
இப்படி பிரிவின் ரம்பக் கத்தியால்
மனதை ரப்பர் போல் அறுப்பார்களென்று
ஒரு நட்சத்திர துகளளவும் நினைக்கவில்லை நான்.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...