Back

Article

July 30, 2022

கட்டுரை

SHARE

கட்டுரை

எதில் பாய்ந்து ஏதாவோமோ என்றறியா கதிரொளி ; விழுமிடமறியாத மழை ; கருக்குழாயின் மென் சவ்வு கிழித்து வெளி வரப்போவது ஆணா பெண்ணா பாலற்ற சிசுவா- வேறெதும் வெற்றுச் சதையா
என்றிறயாது சுமந்து சுரந்து பொங்கும் தாய்மை ; வாளாய் வடிவுற்று களம் எதிர் படும் பகை மார்பு பயந்து செங்குருதி சுவைக்க உலைகலனில் கொதித்துக் கொண்டிருக்கும் உலோகக் குழம்பு
எனது காதல். கண்மணியே தண்மை பொங்கும் சொல்லால் தீண்டு. சொல்லே என் காதல் முகிலை பொழிவிக்கும் காற்று. சொல்லே என் காதல் முலை கசியபண்ணும் மழலை உதடு. சொல்லே என் காதல் பறை
தட்டியதிரச் செய்யும் கோல். சொல்லே என் காதல் வாளை கையேந்த வகை செய்யும் பூண். -பித்தன்

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...