Back

Article

March 4, 2022

கட்டுரை

SHARE

கட்டுரை

ஒரு நாளில் குறைந்த பட்சம்
மணிக்கு ஒரு முறையேனும்
மரணத்தின் கதவுகளை
தட்டிக் கொண்டிருக்கிறேன்.
அது நிச்சயம் திறக்கும் எனத் தெரியும்.
எப்போது? எப்படி? என்பது தான்
எனக்கும் உங்களுக்கும்
ஏன் எல்லோருக்குள்ளுமிருக்கிற
அச்ச வினா.
இந்தக் கணத்தில் இருந்து
மிச்சமிருக்கும் வாழ்வை
எப்படி வாழ்வது அல்லது
எப்படி சாவதென
யோசித்து கழிக்க எல்லோருக்கும்
இரண்டு வாய்ப்பிருக்கிறது.
எப்போதிலிருந்து
எதையும் பற்றாத
நிலைக்கு மனம் பக்குவமுற்றதெனத் தெரியவில்லை.
பற்றுதலென்பதே
பாதி தொங்கலில் தான் என்று
எங்கோ படித்ததாய் ஞாபகம்.
ஆதிக் காதலும் காமமும்
என்னுள் பெருங்கடலாய்
பேரிரைச்சைலிடுகிறது.
நிபந்தனையற்ற காதலைப் பற்றி பேசுகிறவர்கள்
நிபந்தனையற்ற காமம் பற்றி பேசுவதே இல்லையே ஏன்?
அறுந்து அறுந்து மேலெழுகிறது.
அழுகிய பழம் நினைவுகள்.
நினைவின் நாற்றம் பொறுக்காமல்
கண் கண்ணீர் வாந்தி எடுக்கிறது.
நான் நானாய் இல்லை.
யாராய் இருக்கிறேன் என்று யாரும் கேட்காதீர்கள்.
எங்கோ போய் எங்கோ வருகிறது ஞாபகமும் எழுத்தும்.
எப்போது முடிவுக்கு வருமோ
இப்படி நானெழுதும் கவிதையும்
இப்படி நானழும் கண்ணீரும்?
என்னால் எதற்கும் உங்களுக்கு கஷ்டம்.
ஆமாம் உடல் வேறு மனம் வேறா?
சரி கவிதையை முடித்துக் கொள்வோம்.
மனம் எனப்தென்ன மாய உறுப்பா?
கண்ணீரை என்று கேட்காதீர்கள்.
அது கண்ணுள்ள வரை முடியாது.

  • பித்தன்

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...