Article
December 20, 2021
கட்டுரை
SHARE

எப்படி இருந்தாலும் எந்த ஒரு கேலிக்கும் விமர்சனத்துக்கும் ஆளாகாமல் இருக்க முடியாதென்ற உண்மை தெரிந்தும் ஏன், மனிதன் எப்போதும் ஒழுக்கம் போலானா மாயத்திரைக்கு பின் தன்னை மறைத்துக் கொண்டு போலி
வாழ்க்கை வாழ்கிறான்.? ஒருவனின் சுயத்தை மழுங்கடிக்க எத்தனை எத்தனை தடைச் சுவர்கள்? மதம், சாதி, குடும்பம் போன்ற எல்லா நிறுவன அமைப்புகளும் ஒருங்கிணைந்து மனிதனின் சுய முகத்தை, சுதந்திர வாழ்க்கையை
மறந்து அல்லது மறைத்து வாழ நிர்பந்திப்பது ஏன்? எந்த போலியான ஒழுக்க கட்டுத் திட்டங்களுமற்று வாழ முயல்வது ஏன் தப்பான செயலாகவும் ஒழுக்கக் கேடாகவும் சித்தரிக்கப்படுகிறது? இத்தனை கேள்விகளும்
எல்லோருக்கும் எழாமல் போனாலும் நாம் வாழ்ந்து கொண்டிருப்பது ஒரு பொய்யான முகத்தோடு தான் என்பது அவரவர் அறிந்த உண்மையே. எனினும், இவைகளை எல்லாம் மீறி வர, வாழ யாருக்கும் துணிவில்லை. ஆனால் இப்படியான
ஒரு போலி வாழ்கை வாழ்ந்து மதிப்பு மரியாதைகளையும் நல்லதென்று சொல்லப்படுகிற மாய பிம்பத்தையும் சம்பாதித்து என்ன ஆக போகிறது? அதன் பலன் தான் என்ன? . ஏனென்றால் இந்த வாழ்வு, உடல், உயிர் எல்லாமே முடிவு
உள்ளவை. நமக்கு வழங்கப்பட்டிருக்கிற இந்த ஒரே ஒரு வாழ்வை வீணாக்காமல், முழுமையாக அதுவும் "நாமாகவே" வாழ்ந்து களிக்கவும் கழிக்கவும் யாருக்குமே ஆசையில்லை போலும். ஆனால், எனக்கு
அப்படியில்லை.....
"ஒரு பைத்தியக்காரனின் டைரிக் குறிப்புகளில் இருந்து"
,
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...