Back

Article

August 24, 2021

கட்டுரை

SHARE

கட்டுரை

இவன் எப்பவும் இப்படி தான். எழுதி கிட்டே பக்கத்துல பேசுவான். பக்கத்துல பேசி கிட்டே எழுதுவான். பக்கத்துல பேசினதயும் எழுதுவான். பேசினதயே பக்கம் பக்கமா எழுதுவான். கிறுக்கன். அந்த பெரியம்மா யாரும்
இல்லை. பேரு பெரிதாயி. அவங்க கணவர் மாரடைப்பால் செத்து வருசம் பத்து ஆகுது. ஆனாலும் தன்னோட ரெண்டு பொம்பள புள்ளைங்க, ஒரு பையன், செத்து போன அக்கா மக, அது பெத்த குட்டி பையன் னு எல்லோரையும் ஒண்டியா
ஒழச்சு வளர்த்து வாருவம் பண்ணிருக்கு. மூத்த புள்ளைக்கு கல்யாணம் கட்டி வச்சு துரும்பு (விவாகரத்து) வாங்கியாச்சு. அக்கா பொண்ணும் அப்படியே ஆச்சு. ஆனாலும் திடங் குறையாம நின்னு சமாளிச்சு பத்து
வருசத்த கடந்து வந்திருக்கு. இன்னும் ஒழைக்குது. இதுலாம் பார்க்கும் நமக்கும் ஒரு ஊக்கம் வருதுல்ல. ஆமா இத எதுக்கு இப்போ சொன்னேன்? மனுசம் புத்திய பாத்திங்களா? அடுத்தவனோட கஷ்டத்துல இருந்து ஆறுதல்
தேடுது. ஆறு..... தல். ஆறுதல். மாறுதல். தேறுதல். தேறுதல். தேர்தல்.இப்போ எல்லாம் தேர்தலா நடக்குது. எல்லாம் ஏமாத்து வேலை. ஊரு உழைப்பு சுரண்டுற வேல. ச்சீ. அந்த சாக்கடைய பத்தி பேச வேணாம்.
மூக்கடைச்சு கடந்துடலாம். கடந்துட்ட பிறகு யாரு சுத்தம் செய்யறது? நாம தான். நான் தான். நீ தான். ச்சீ. ச்சீ.
ச்சீ னு சொன்னதும் ஷிபோ நினைவுக்கு வராள். அவளுக்காக ஒரு கவிதை எழுதி இருக்கேன்.
"அன்பே ஷிபோ.
நீ சொல்லாதே ச்சீ போ." நல்லா இருக்கு ல்ல. அது என்ன இருக்கு இல்ல.? நல்லா தான இருக்கு.? ம்ஹூம். நல்லா இருக்கு. தான் தான லாம் கூடாது. தான் னு சொல்றது லாம் தாழ்த்திக்றத போல. புரியுதா? அது
சந்தேகச் சொல்லும் கூட. உ.தா. எங்க அப்பா கூலி வேலை தான் செய்யறாங்க என்பதற்கும் எங்க அப்பா கூலி வேல செய்யறாங்க என்பதற்கும் வேறுபாடு புரியுதா? யலயா? புரியலயா? சரி வேற உ. தா:- எனக்கு சம்பளம்
பத்தாயிரம் தான். எனக்கு பத்தாயிரம் சம்பளம். புரியுதா? இப்போ புரிஞ்சிருக்குமே. தெரியும்.ஏன்னா பணம் பத்தும் செய்யும். பத்தாயிரமும் செய்யும்.

  • சகி என்கிற கதையில் இருந்து,

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...