Back
Article
August 22, 2021
கட்டுரை
SHARE

பாறை பிளவுக்கொப்புரைக்கலாம்
என்றாலும்
இரண்டின் தன்மையும் வேறாய் இருக்கிறது.
மையமகன்ற
இரு முனை குவிந்த இலையென
சொல்லவும் யோசனையாக இருக்கிறது.
வேரடி வள்ளிக் கிழங்கின்
வடிவத்தை போல
சுவையும் எனினும்
தொட்டிட அமிழ்தூறும் நிலைக்கு
எதை ஒப்புச் சொல்வதென
தயக்கமாயிருக்கிறது.
ம்ம்...
படம் விரி சர்ப்பம் போலென
அல்லது
சிவனின் திறந்த நெற்றிக் கண் போலென
சொல்வது சாலப் பொருந்தும்.
ஆமாம்.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...