Back
Article
May 20, 2021
கட்டுரை
SHARE

வாழ்வின் இறுதிப் படிகளில்
நிற்குமென்
விழிகளின் விளிம்பில்
மலர்கிறதொரு
சாம்பல் வண்ணக் கனவு.
ஆளற்ற வனாந்தரத்தில்
நீந்தும் மீனின் வேகத்தில்
இமைச் சிமிட்டும்
அறியாப் பிள்ளை போல
அலைந்து திரிந்து கொண்டிருக்கிறேன் நான்.
காலடியில் நொறுங்கும்
இலைச்சருகுகளின் ஓசை
பேயாய் மிரட்டுகிறது என்னை.
கிளைகளின் வழியே நுழைந்து வரும்
சூரிய வெயில்
தங்க வாளாய் பளபளத்திறங்குகிறது
என் மேல்.
சாவின் பயம்
ஊனாங் கொடியாக
கால்களைப் பின்னி வளர
மரண அலறலோடு
மடிந்து விழுகிறேன் நான்.
எங்கிருந்தோ
தேவதையின் சிறகுகளோடு
வந்த நீ
என்னை சுமந்து கொண்டு
பறந்து போகிறாய்
கனவு கலைந்து விழித்தால்
நீ என்னைப் பிரிந்து
எழநூற்று பதினொறு நாளாகிறதென்று
காட்டிச் சிரிக்கிறது
என் வீட்டு காலண்டர்.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...