Back

Article

April 29, 2021

கட்டுரை

SHARE

கட்டுரை

எனக்கு பொதுவாக இந்த சமூகம் பைத்தியக்காரன் என்று சொல்கிறவர்களைப் பார்த்தால் பொறாமையாக இருக்கும். அந்த வகையில் நானும் ஓர் பைத்தியக்காரனாகவே இருக்க ஆசைப்படுகிறேன் (உள்
புறம் இரண்டிலும்) . இந்தச் சமூகத்தாரோடு சேர்ந்து தன் பெண்டு, தன் பிள்ளை, தன் வீடு, தன் குடும்பம் என்று வாழ்கிற வாழ்க்கையில் ஏனோ எனக்கு விருப்பமே இல்லை. சரியாக நினைவு
இருக்கிற பட்சத்தில், 14 வயதில் தொடங்கிய குடும்ப அமைப்பின் மீதான ஒரு ஒவ்வாமை உணர்ச்சி இன்னும் அப்படியே தான் இருக்கிறது. இதனாலே எனக்கு கல்யாண வாழ்கையில் கூட உடன்பாடு
இல்லை. என்னுடைய ஆசை எல்லாம் ஒரு நாடோடி போல, ஒரு பைத்தியக்காரனைப் போல எல்லாம் என் ஊர், எல்லாம் என் மக்கள் என்று அலைந்து திரிந்து, எல்லோரையும் ஏற்றத் தாழ்வின்றி நேசித்து,
நெருங்கிப் பழகி வாழ வேண்டும். கூடவே இந்தச் சாதி மத அமைப்புகள் ஒழிய குரல் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். ஆமாம் இவர்கள் "சாதி தப்பு, மதம் தப்பு" என்று
சொன்னாலே ஏனோ பெரியாரிஸ்டா அம்பேத்கரிஸ்டா என்ற கேள்விகளோடு வந்து நிற்கிறார்கள். இல்லை, தெரியாமல் தான் கேட்கிறேன் சக மனிதனை கீழாக நடத்துகிற இந்தச் சாதி, மத அமைப்புகளை
தப்பு என்று சொல்லவும் உணரவும் மனிதனாக இருந்தால் போதாதா என்ன? - பைத்தியக்காரன்

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...