Article
August 7, 2020
கட்டுரை
SHARE

எல்லா வகையிலும் தோற்று விட்டதைப் போலவே உணர்கிறேன். உணர்கிறேன் என்பதை விட அது தான் உண்மை. அந்த உண்மையை ஏற்க மறுக்கிறது மனது. ஆனால் தோற்று விட்டேன் என்பது தான் தீயிட்டு எரித்தாலும் எரியாத நிஜம்.
ஒரு மனிதனாய், நண்பனாய், மகனாய், தமையனாய், காதலனாய், கவிஞனாய் என எல்லா வகையிலும் தோற்று விட்டேன். நான் என்ன ஆகிக் கொண்டிருக்கிறேன்.? நான் என்பதன் அடையாளம் என்ன? எதுவாகவும் முழுதாய் ஆகாமல் ஒரு
மாமிச பிண்டமாய் கிடக்கிறேன். நான் என்பதன் அர்த்தம் தான் என்ன? அஜித்குமார் என்பதற்கு முன்னும் பின்னும் எந்த அடையாளமுமற்று இப்படியே செத்து விடுவேனோ? அஜித்குமார் என்பது வெறும் பெயர் தானே?
இப்போதெல்லாம் ஆடு மாடு நாய் நரிக்கெல்லாம் பெயர் வைக்கிறார்களே! ஐயோ... எனக்கு என் பெயரைக் கடந்த அடையாளம் எதுவும் இல்லையா? சோம்பேறியாகவே நாட்கழித்து விட்டோனோ? இத்தனை ஆண்டுக கால வாழ்வின் வளர்ச்சி
தான் என்ன?
😢
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...