Article
April 10, 2020
கட்டுரை
SHARE

கடவுளைக் கொச்சைப்படுத்துவதோ, இல்லை யென்று சொல்லுவதோ என் நோக்கம் அல்ல. கடவுளின் பெயரைச் சொல்லிக் கொண்டு அல்லது கடவுள் படைப்பித்ததாகச் சொல்லிக் கொண்டு தீண்டாமையையும் சாதிப் பிரிவினையையும் கடை
பிடிப்பீர்களாயின் உங்கள் கடவுளைக் கொச்சைப்படுத்த மட்டும் இல்லை, இல்லையென்று சொல்லவும் தயங்க மாட்டேன். கொஞ்ச யோசித்து பாருங்கள். நீங்கள் இதுவரை கண்டே இராத கடவுளைத் திட்டுவதும் இல்லையென்று
சொல்லுவதும் உங்களுக்கு வலிக்குமாயின், கண்ணால் பார்த்து, கையால் தொட்டுப் பார்க்க முடிகிற, என்னைப் போல் உள்ள (ஏன் உங்களைப் போ போலும் உள்ள) ஒரு கூட்டத்தையே, ஒரு மாபெரும் ஜனத்திரளையே சாதிப் பெயர்
சொல்லி தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கி வைத்திருக்கிறீர்களே, அது எவ்வளவு பெரிய வலி? அது எவ்வளவு பெரிய வேதனை என்று உணர்ந்து பாருங்கள். பிறப்பால் ஒருவனை மட்டம் தள்ளச் சொல்லி ஒரு கடவுளும் மதமும்
சொல்லுமாயின் அப்படிப்பட்ட மதமும் கடவுளும் தேவை இல்லை என்று சொல்லுவதோடு நில்லாமல் அதை இல்லாமல் செய்யவும் முயற்சிப்பேன். இதையெல்லாம் சொன்னால் மதத் துவேஷியாக ஆகக் கூடும். உங்கள் ஏச்சுக்கும்
பேச்சுக்கும் ஆளாகக் கூடும். அதைப் பற்றி எள்ளளவும் கவலை இல்லை. நான் எப்படி பட்டவனாக வேண்டுமானால் இருக்கலாம். கெட்டவனாகவே இருந்தாலும் மனிதனாகவும் மனிதாபி மானத்தோடும் இருக்க நினைக்கிறேன்.
#அன்பே_யாவும். ❤️
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...