Article
January 28, 2020
கட்டுரை
SHARE

சுயப் பிரக்ஞையற்று
சகலமுமாய் எண்ணி
யாரையேனும் திகட்ட திகட்ட காதலித்திருக்கிறீர்களா?
அவர்களே நீங்கள் என்றும்
நீங்களே அவர்கள் என்றும்
நினைத்து நினைத்து
தவித்திருக்கிறீர்களா?
வெந்நீருக்கும் நெருப்பனைக்கிற சக்தி இருப்பதைப்போல
பிரியமானவர்களின் கோவத்தினூடே இருக்கிற
அன்பை உணர்ந்திருக்கிறீர்களா?
மார்க்கழி குளிருக்கு
தாய் பறவையின் சிறகிலொடுங்கி அடங்கும்
குஞ்சு பறவை போல
உங்களை மொத்தமாய்
யாரிடத்திலேனும் சரண் புகுத்தி இருக்கிறீர்களா?
அன்பிற்கு கீழ் படிவதென்பது
ஒரு மலருக்குள் உறங்குவதைப் போலானது.
அன்பைப் பெறுவதை விட
தருவதில் அலாதி சுகம்
அடங்கி இருக்கிறது.
உணர்ச்சி பாயும் நரம்புகளினூடே
மின்சாரம் பாய்ச்சும் அந்த
பரவச உணர்வில்
பரம சுகம் இருக்கிறது.
உங்கள் தீராத அன்பினால்
யாரையேனும்
பரிபூரணமாய் நேசித்து பாருங்கள் .
ஒரு உயிரின்
பூரணத்தின் பூரிப்பில்
உங்களுக்குள் உறைந்து இருக்கிற
தாய்மையைக் காண முடியும்.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...