Back

Article

August 2, 2019

கட்டுரை

SHARE

கட்டுரை

"ஆத்து தண்ணி எடுத்து விட்டுருங்காங்க.." என்று எல்லோரும் அவசர கதியில் குடத்தை எடுத்துக் கொண்டு பைப் அடிக்கு ஓடி வந்தார்கள்..அவளும்...கல்யாணம் ஆகி ஒரு வருமாசகிறது.. இப்போது ஆறு மாசம்
முழுகாமல் இருக்கிறதாய் கேள்விப்பட்டேன்..
கேள்வி பட்டதற்கு ஆதாரமாய் வயிறு கொஞ்சமாய் வளர்ந்து தெரிந்தது...
குலை தள்ளும் வாழையை போல பொலிவும் மினுமினுப்புமாய் அழகாய் இருக்கிறாள்..
உடலெங்கும் சௌந்தர்யம் ததும்ப கையில் குடத்தோடு கண் முன் நின்று கொண்டிருக்கிறாள்..
இரண்டு உயிரின் ஜீவகளை மொத்தமாய் இந்த ஒற்றை முகத்தில் பிரகாசித்து ஒளிர்கிறது...
கடவுள் பிம்பங்களின் பின்னொளிரும் ஒளி வட்டமாய் வெளிச்சமுமிழ்ந்து கொண்டிருக்கிறது அவள் தேகம்....
உடம்பிலும் மார்பிலும் தாய்மையின் அடையாள சதை திரட்சி....
சொல்லுக்குள் அடங்காத அழகு..

❤️

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...