Article
April 19, 2019
கட்டுரை
SHARE

சிலர் என் கிட்ட அடிக்கடி சொல்றதும் கேட்க்றதும் உண்டு.
ஏன் நீங்க அரசியல பத்தி எழுதலாமே/எழுதறதில்ல.
எல்லோர போலவும் எனக்கும் அரசியல சாடி எழுதிட்டு போக விருப்பமில்லை. அதென்னவோ தெரியல என்னென்னவோ விசயத்த பத்தி எழுதிட முடியுது. ஆனா இந்த அரசியல பத்தி எழுத தோனவே மாட்டேங்குது. (பிற்காலத்தில
எழுதினாலும் சொல்றதுக்கு இல்ல) உள்ளுக்குள்ள இருந்து ஒரு குரல் "யாரையும் சாடி பேசாத. எழுதாத. உன்னால அந்த மானங்கெட்ட அரசியல கூட பண்ண முடியல ல்ல . அரசியல பேசாத.முடிஞ்சா செய். இல்லாட்டி மூடிக்
கொண்டு இரு." என. எல்லா விசயத்த பத்தியும் கருத்தியல் ரீதியான புரிதல வளர்த்துட்டு வரேன். தினசரி கடமைகள் ல படிக்கறதையும் பண்ணிட்டு வரேன். இது வரையும் ( எந்த துறையிலும்) பெரிய கைகள் யாரையும்
சந்திச்சதில்ல. நட்புமில்ல. ஒரு சராசரி மனிதனுக்கும் கீழாகத் தான் இருக்கேன். அரசியல் பின்புலத்திலும் சரி , பண பலத்திலும் சரி. இருந்தாலும் வாசிப்பு மூலமா என்னைய நான் வலுப்படுத்திட்டு இருக்கேன்.
பணம் கை விடலாம். பதவி கை விடலாம். கூட இருக்கவங்க கை விடலாம். ஆனா கத்து கிட்ட விசயம் கை விடாது னு நம்புறேன். தினமும் வாசிக்றேன். நீங்களும் வாசிங்க. எதையாவது.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...