Article
February 23, 2019
கட்டுரை
SHARE

எல்லாமே முரணானால்
என் செய்வேன் நான்..???
காதல் பிடிக்கும்
காதலிக்க பிடிக்காதென்ற
கட்டுப்பாட்டோடு வாழ நினைத்தேன்.
காலத்தின் சுழற்சியால்
காதலில் விழுந்தேன்.
நச்செள்ளை யொத்த
நல்லதொரு கவியாளை
காதலிக்க நினைத்தேன்.
மொழிக்கே இலக்கணம் தெரியா
உன்னை உயிர் கசிய
நேசித்தேன்.
அளப்பறிய அன்போடிருப்பாய்
என நினைத்தேன்.
பதில் நேசமும் செய்யாது
பாதியளவே நேசித்தாய்.
என்னை சார்ந்தோரையும்
உன்னை சாந்தோராய்
எண்ணுவாய் என நினைத்தேன்.
ஆனால் நீ
என்னையே அந்நியமாய் பாவிக்கிறாய்.
தவறேதும் செய்யாத போதும்
மன்னித்து விடு என்று
மடி விழுந்து கெஞ்சும் எனை
கொஞ்சித் தழுவிக் கொள்வாய் என
நினைத்தேன்.
நீயோ கொடிய நஞ்சென
எனை தள்ளிவைத்தாய்.
விலகி நின்றாலேனும்
நெருங்கி வருவாயென நினைத்தேன்.
நீயோ சனியன் தொலைந்ததே
என்பது போல்
சாதரணமாய் இருக்கிறாய்.
அடியே ஆலகால விஷமே
உன்னால் அனுதினமும்
அவஸ்தைகள் அனுபவிக்கிறேன்.
உன் சாதரண அன்பெனக்கு
சௌகரியப் படாது.
விட்டு விடு.
இல்லை நான் தானே
உன்னை பிரியத்தோடு
பிடித்திருக்கிறேன்.
இதோ
பிடி தளர்த்திவிட்டேன்.
கட்டாயக் காதல் செய்யாதே.
போ.
#ரொம்ப_பழசு
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...