Back
Article
February 3, 2019
கட்டுரை
SHARE

போலானதை போல் இல்லாமல்
அவன் போல்
இவன் போல்
எவன் போலும் இல்லாமல்
அது போல்
இது போல்
எது போலும் இல்லாமல்
ஏன்
நேற்றிருந்த
என் போலும்
இன்றிருக்கிற
நான் போலும் இல்லாமல்
நாளுக்கொரு என்னை
நானே பிரசவித்து
அன்றைக்கொரு அவதாரத்தில்
வாழப் போகிறேன்..
உதிரும் இறகின் நிழலாய்
உடல் சாயும் முன்னே
உயிர் மாயப் போகிறேன்..
தோன்றும் நிலா தோய்ந்தாலும்
மின்னும் மீன் வலை காய்ந்தாலும்..
தானே தானாய் இருக்கும் இரவாய்..
நானும் நானாய் இருப்பேன் ..
இது போல் இது போலொரு கவிதையின்
பொருளின் ஆழத்தில் கருவாய் சிரிப்பேன் ...
போலானதை போல் இல்லாமல்
வாழ்ந்து சிலிர்ப்பேன்.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...