Back

Article

December 26, 2017

கட்டுரை

SHARE

கட்டுரை

#என்னை_கேட்டால்

சாதி மத பிரிவோடு
தீண்டாமைக்கு வித்திட்டது
பார்ப்பனர்கள் அல்ல
பாலின பேதம் என்பேன்.

எத்தனை பேதங்கள்.

உடுத்தும் உடுப்பில் இருந்து நடத்தும் முறை வரை அனைத்தும் மாறுபடுகிறது.
#உடலுக்கு_மட்டுமே_பேதங்கள்_உண்டு_உயிருக்கல்ல. அது வெறும் ஜீவ பிரவாகம்.
#குரோமோசோம்_செய்யும்_குளறுபடி_தான்_இந்த_புறத்தோற்ற_மாறுதல்கள். மற்றபடி ஆணுக்கும் பெண்ணுக்கும் பெரிதாய் பேதம் ஒன்றுமில்லை.

சாதியின் முக்கிய நோக்கம் யாரேனும் யாருக்கேனும் அடிமையாய் இருக்க வேண்டும் என்ற எண்ணமே ஆகும். அதாவது சாதி மத பேதங்களின் ஆதி மூலம் ஆணாதிக்கம் என்று சுருங்கச் சொல்லலாம்.

தாழ்ந்த சாதி என்று சொல்கிற கூட்டம் கூட தனக்கு கீழாக ஒரு கூட்டம் இருப்பதில் குதுகலித்து போகிறது. ஆமாம் பெண் மீதான ஆதிக்கத்தையே சொல்கிறேன்.

தாழ்வது தவறில்லை என்று சொன்னது நான் தான். ஆனால் தாழ்த்தப்படல் தவறில்லை என்று சொல்ல வில்லை.
#பிறரால்_தாழ்த்தப்படல்_கொடுமையும_பிறரை_தாழ்த்துதல்_கொடுஞ்செயலும்_ஆகும்.

இந்த புரிதல் இல்லாத வரை இந்த சமுதாயத்தில் பெரிய மாறுதல் உண்டாகி விடாது.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...