Back

Article

December 7, 2017

கட்டுரை

SHARE

கட்டுரை

தாகத்திற்கு தண்ணீர் கேட்பேன்
பாத்திரத்தில் முகந்து வந்து
பத்திரமாய் மோதாமல்
என் முகத்துக்கு மேலுயர்த்தி
ஊற்ற ஊற்ற கையொட்டி
உறிஞ்சி குடிக்க சொல்வார்கள்.

எப்போதேனும் தேநீர் கொடுப்பார்கள்
குப்பை குழிக்கு போக காத்திருக்கும்
தேங்காய் தொட்டியில்.

நான் நகர்ந்த பிறகு
அமர்ந்த இடத்தை
தண்ணீரில் கழுவுவார்கள்.

வேடிக்கை தான்

பாத்திரத்தில் தண்ணீரும் தேநீரும்
தராதவர்கள்
நான் அமர்ந்த இடத்தை
தண்ணீரில் கழுவியவர்கள்

நான் நுகரந்து விட்ட காற்றை
என்ன செய்வார்கள்?

என் மீது பட்டோடி
அவர் மீது பட்டுக் கொண்டிருக்கும்
வெயிலை என்ன செய்வார்கள்?

என் பாதம் படம் மண்ணை
என்ன செய்வார்கள்?

நான் பேசும் போதொலிக்கும்
என் சப்தங்களை
என்ன செய்வார்கள்?

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...