Back

Article

November 13, 2017

கட்டுரை

SHARE

கட்டுரை

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்? இல்லை என் வீட்டுக்கு இதுவரை நான் தாழிட்டதில்லை? ஆனாலும் அன்பின் சுவையறிந்ததில்லை. வயதான பின்னும் மனப்பிள்ளை அழுவதை மட்டும்
மறப்பதில்லை. அன்பு ஏங்கி ஏங்கி இந்த கருங்காலித் தூண்களை போல் கண்களும் காலக் கரையானால் செல்லரித்து போய் விட்டன. இருக்கட்டும். காலம் எதற்குமொரு முடிவு வைத்திருக்கும். என்
முடிவில் இந்த ஏக்கத்திற்கொரு விடிவு வைத்திருக்கும். ஆமாம், ஒண்டி பனைமரமென என்னை ஒதுக்கி வைத்த சொந்தங்களால் நிறைந்து ததும்ப நினைவு ததும்பி நிற்கிறது பழைய வீடும் பழுதான
என் கூடும். தனிமை துண்களை சுமந்து நிற்கும் என் வீடு நிச்சயம் நிறையும் பாதங்களால் மட்டும் அல்ல பாச ஓலங்களாலும். கடனுக்கு சிலர் சிந்தும் கண்ணீர் துளிகளாலும். உடலுக்கு
நிகழும் சடங்குகளாலும். . உயிர் போன பின் தானே பொத்தி வைத்த நேசப்பூ சத்தோடு பூத்து வாசம் வீசத் தொடங்குகிறது. இல்லாரை நல்லாரென போற்றி பேசத் தொடங்குகிறது. சற்று பொறுங்கள்.
என்னுள் லப் டப் சத்தம் குறைகிறது. சற்று பொறுங்கள் சிலர் டப் டப் என நடக்கும் சத்தம் என்னை நெருங்குகிறது. ம்ம் இதோ பாதங்களால் நிறையும் என் வீடு பாருங்கள். பாச ஒப்பாரி
கேளுங்கள்.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...