Article
October 31, 2017
கட்டுரை
SHARE

நான் படித்த இல்லை கேட்ட கதையின் கரு கொண்டு எழுதப்படும் கவிதை. என் முன்னழகும் பின்னழகுமாய் வயசும் அழகும் எதிரெதிரே ஓடின. வயசு கூட கூட அழகு குறைந்தோடியது. வரன் தேடி
வருவோரெல்லாம் வாய் நிறைய குறைகளை சுமந்து வந்தனர். சிரிப்பு அழகென்றவன் சிறிய மூக்கென்றான் கரு உதடு ரசித்தவன் கண்ணில் உயிரில் லை என்றான். கன்னக்குழியில் விழுந்தவன் கர
கரப்பான குரலென்றான். சங்கு கழுத்து பிடித்ததென்றவன் சற்று பெருத்த உடம்பென்றான். காலுக்கு கீழாடும் கூந்தல் கட்டி இழுத்ததென்றவன் காதோரம் சிறு நரை என்றான். முழுதும்
பிடித்து போனவன் இவ்வளவு அழகிருந்தும் இன்னும் உன் கல்யாணம் இழுபறியாய் இருப்பதேன்? பெண் மையில் ஊனமோ என உயிர் சுட்டான். பத்து பவுன் நகைக்கு பல்லை இழித்து கொண்டு பேசாமல்
சம்மதித்தவன் பெண்ணுக்கு செவ்வாதோஷம் என பெருஓட்டம் எடுத்து விட்டான். இப்படி வருவோர் போவோர்க்கெல்லாம் காட்சி பொருள் போல கால நதிக்கரையில் கண்ணாளன் வருவானென கன்னி
நான்-இல்லை முதிர்ந்த கன்னி நான் முந்தானை ஏந்தி நின்றேன். கண்ணாளன் வரும் வழியும் தெரியவில்லை. நான் கன்னி கழிய ஒரு வழியும் தெரியவில்லை. கட்டாயமாக எவனேனும் கற்பழிக்க
முயன்றால் சம்பிரத்தாயத்துக்கு சற்று முரண்டு பிடித்தாலும் நிச்சயம் சம்மதித்து விடுவேன். உணர்ச்சிக்கு வசப்பட்ட உயர்திணை சாதியில் பிறந்தவள் எனக்கும் உணர்விருக்காதா? என்ன.
உள்ளிருந்து நீ உதைக்கும் வலி எப்படி இருக்கும் அடிக்கடி அடிவயிறு தட்டி பார்க்கிறேன். நிறைமாசத்தில் உன்னை சுமந்திருக்கும் என் வயிறு எப்படி இருக்கும்? துணிகளை மூட்டைகட்டி
ஆடை க்குள் துருத்தி அழகு பார்க்கிறேன். பிறந்த பின் ஆண்பிள்ளையா பெண் பிள்ளையா என கேட்போரிடம் என் பிள்ளை என சொல்ல காத்திருக்கிறேன். உன்னை எப்படி உறங்க வைக்கலாம் உண்ணும்
போதும் தாலாட்டு கேட்கிறேன். உன்னோடு எப்படி உறங்கலாம் தலையணையோடு தினம் ஒத்திகை பார்க்கிறேன். உறக்கத்தில் உன் கைகால்கள் என் மேல் விழுந்தால் உன் உறக்கம் கலையாமல் எப்படி
ஒதுக்கி விடுவது ஆடை விலகியதும் தெரியாமல் ஆழ்ந்து யோசிக்கிறேன். எச்சில் படாமல் எப்படி உன்னை முத்தமிடலாம் கண்ணாடியை முத்தமிட்டு கற்கிறேன். எதிர்பார நேரத்தில் என்னை நீ
முத்தமிட்டால் எப்படி இருக்கும் எண்ணி எண்ணி வெட்கப்படுகிறேன். இறுக்கமில்லாமல் உன்னை அணைப்பதெப்படி என்னை நானே அணைத்து பார்க்கிறேன். உன்னை எப்படியெல்லாம் செல்லம் கொஞ்சலாம்
உலகிலக்கியங்களை புரட்டி பார்க்கிறேன். உன் சின்னவாய் திறந்து சிநேகத்தோடு எப்படி என்னை அழைப்பாய் குயிலை கூவச் சொல்லி கேட்கிறேன். இப்படி ஏகபோக எதிர்பார்ப்புகளோடு என்
மலட்டு மார்களில் பால் சுரக்க காத்திருக்கும் இந்த வெத்து சிப்பியை முத்து சிப்பியாக்கி என்னோடு முத்தாட வருவாயா என் முத்தாரமே.
என் தகப்பனுக்காய் நானெழுதும் முதல் கவிதை இது. கண்டு பூத்து காணாது காய்க்கின்ற கள்ளச்செடியன்ன உள்ளுக்குள் காதல் வைத்து கண்பார்க்க கடிந்து பேசி காணாத நேரம் காதல் செய்யும்
கள்ள நேசனே.....! என் ஆகாயம் ஆதாயம் எல்லாமும் நீயானாய். "எனக்கு சொத்து பத்தெல்லாம் எம்மக்க குட்டிக தானு மார் தட்டி சொன்னவனே" என் உள்ளும் புறமும் சொல்லும்
செயலும் கருவும் கவியும் குருவும் திருவும் யாதும் நீயானாய்.... எனை ஈனாத தாயானாய்...
காற்றோடு கலந்த பூந்தேனும் ஆற்றோடு போகும் கருவாட்டு மீனும் நேற்றோடு இறந்த வெறுங்கூடு நானும் இன்னும் கண்டு கொள்ளப்படாமல்.
நான் படித்த இல்லை கேட்ட கதையின் கரு கொண்டு எழுதப்படும் கவிதை. என் முன்னழகும் பின்னழகுமாய் வயசும் அழகும் எதிரெதிரே ஓடின. வயசு கூட கூட அழகு குறைந்தோடியது. வரன் தேடி
வருவோரெல்லாம் வாய் நிறைய குறைகளை சுமந்து வந்தனர். சிரிப்பு அழகென்றவன் சிறிய மூக்கென்றான் கரு உதடு ரசித்தவன் கண்ணில் உயிரில் லை என்றான். கன்னக்குழியில் விழுந்தவன் கர
கரப்பான குரலென்றான். சங்கு கழுத்து பிடித்ததென்றவன் சற்று பெருத்த உடம்பென்றான். காலுக்கு கீழாடும் கூந்தல் கட்டி இழுத்ததென்றவன் காதோரம் சிறு நரை என்றான். முழுதும்
பிடித்து போனவன் இவ்வளவு அழகிருந்தும் இன்னும் உன் கல்யாணம் இழுபறியாய் இருப்பதேன்? பெண் மையில் ஊனமோ என உயிர் சுட்டான். பத்து பவுன் நகைக்கு பல்லை இழித்து கொண்டு பேசாமல்
சம்மதித்தவன் பெண்ணுக்கு செவ்வாதோஷம் என பெருஓட்டம் எடுத்து விட்டான். இப்படி வருவோர் போவோர்க்கெல்லாம் காட்சி பொருள் போல கால நதிக்கரையில் கண்ணாளன் வருவானென கன்னி
நான்-இல்லை முதிர்ந்த கன்னி நான் முந்தானை ஏந்தி நின்றேன். கண்ணாளன் வரும் வழியும் தெரியவில்லை. நான் கன்னி கழிய ஒரு வழியும் தெரியவில்லை. கட்டாயமாக எவனேனும் கற்பழிக்க
முயன்றால் சம்பிரத்தாயத்துக்கு சற்று முரண்டு பிடித்தாலும் நிச்சயம் சம்மதித்து விடுவேன். உணர்ச்சிக்கு வசப்பட்ட உயர்திணை சாதியில் பிறந்தவள் எனக்கும் உணர்விருக்காதா? என்ன.
உள்ளிருந்து நீ உதைக்கும் வலி எப்படி இருக்கும் அடிக்கடி அடிவயிறு தட்டி பார்க்கிறேன். நிறைமாசத்தில் உன்னை சுமந்திருக்கும் என் வயிறு எப்படி இருக்கும்? துணிகளை மூட்டைகட்டி
ஆடை க்குள் துருத்தி அழகு பார்க்கிறேன். பிறந்த பின் ஆண்பிள்ளையா பெண் பிள்ளையா என கேட்போரிடம் என் பிள்ளை என சொல்ல காத்திருக்கிறேன். உன்னை எப்படி உறங்க வைக்கலாம் உண்ணும்
போதும் தாலாட்டு கேட்கிறேன். உன்னோடு எப்படி உறங்கலாம் தலையணையோடு தினம் ஒத்திகை பார்க்கிறேன். உறக்கத்தில் உன் கைகால்கள் என் மேல் விழுந்தால் உன் உறக்கம் கலையாமல் எப்படி
ஒதுக்கி விடுவது ஆடை விலகியதும் தெரியாமல் ஆழ்ந்து யோசிக்கிறேன். எச்சில் படாமல் எப்படி உன்னை முத்தமிடலாம் கண்ணாடியை முத்தமிட்டு கற்கிறேன். எதிர்பார நேரத்தில் என்னை நீ
முத்தமிட்டால் எப்படி இருக்கும் எண்ணி எண்ணி வெட்கப்படுகிறேன். இறுக்கமில்லாமல் உன்னை அணைப்பதெப்படி என்னை நானே அணைத்து பார்க்கிறேன். உன்னை எப்படியெல்லாம் செல்லம் கொஞ்சலாம்
உலகிலக்கியங்களை புரட்டி பார்க்கிறேன். உன் சின்னவாய் திறந்து சிநேகத்தோடு எப்படி என்னை அழைப்பாய் குயிலை கூவச் சொல்லி கேட்கிறேன். இப்படி ஏகபோக எதிர்பார்ப்புகளோடு என்
மலட்டு மார்களில் பால் சுரக்க காத்திருக்கும் இந்த வெத்து சிப்பியை முத்து சிப்பியாக்கி என்னோடு முத்தாட வருவாயா என் முத்தாரமே.
என் தகப்பனுக்காய் நானெழுதும் முதல் கவிதை இது. கண்டு பூத்து காணாது காய்க்கின்ற கள்ளச்செடியன்ன உள்ளுக்குள் காதல் வைத்து கண்பார்க்க கடிந்து பேசி காணாத நேரம் காதல் செய்யும்
கள்ள நேசனே.....! என் ஆகாயம் ஆதாயம் எல்லாமும் நீயானாய். "எனக்கு சொத்து பத்தெல்லாம் எம்மக்க குட்டிக தானு மார் தட்டி சொன்னவனே" என் உள்ளும் புறமும் சொல்லும்
செயலும் கருவும் கவியும் குருவும் திருவும் யாதும் நீயானாய்.... எனை ஈனாத தாயானாய்...
காற்றோடு கலந்த பூந்தேனும் ஆற்றோடு போகும் கருவாட்டு மீனும் நேற்றோடு இறந்த வெறுங்கூடு நானும் இன்னும் கண்டு கொள்ளப்படாமல்.
Ajithkumar இன் இடுகைகள், 39,000 முறை விரும்பப்பட்டுள்ளன
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...