Article
July 26, 2017
கட்டுரை
SHARE

பணமின்றி போனால்?
என்ன ஆகும்?
சின்ன வீடு
பெரிய வீடு என
கோடியில் வீடு கட்டி
மாடியில் வாழ்ந்தவர்கள் நிலை என்ன ஆகும்?
இயற்கை உபாதைகளுக்கும்
இரைப்பை உபாதைகளுக்கும்
பணம் கேட்டவர்களின்
அந்த பால் வடியும் முகம்
என்ன ஆகும்?
நிதி வாங்கி-பின்
நீதி போதனைகள்
நிறைய சொல்லும்
கல்வி நிறுவனங்களின் கதி
என்ன ஆகும்?
கால் தொட்டு
கை தொட்டு
நிறைய கதைகள் விட்டு
பதவிக்கு போனபின்
பழையதை மறந்து
பாக்கெட்டின் கொள்ளளவுக்கும் மேல்
பணம் சேர்ந்தவர்களின்
பரிதாப நிலை
என்ன ஆகும்?
அச்சச்சோ
அத்தனையும்
பரிதாபங்கள்
அழுவதா?
சிரிப்பதா?
பணம் இன்றி போனால்
இவர்களின் என்ன ஆகுமோ தெரியவில்லை?
ஆனால்
விளக்கெரிந்தவர்கள்
வீட்டில் வயிறெரியும்.
வயிறெரிந்தவர்கள் வீட்டில்
அடுப்பெரியும் என்பது மட்டும்
எனக்கு தெரியும்.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...